நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் காவிரி ஆற்றங்கரை ஓரம் அசலதீபேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு இளநீர், பால், திருமஞ்சனம், கரும்புச்சாறு, தயிர் உட்பட பல்வேறு திரவங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து சாமிக்கு மலர் அலங்காரம் செய்து விசேஷ பூஜை நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.