கோதுமையின் விளைச்சல் கடந்த ஆண்டு குறைந்த காரணத்தினால் அதன் விலை உயர தொடங்கியது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்தது. ஆனால் அதையும் மீறி கோதுமை விலை உயர்ந்தது. அதாவது சராசரியாக கிலோ ஒன்றுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் மதிய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து கோதுமை உலை உயர்வை குறைப்பதற்காக வெளிச்சந்தையில் கோதுமையை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது, தன்னுடைய சேமிப்பில் இருந்து 30 லட்சம் டன் கோதுமையை மத்திய உணவு அமைச்சகம் வெளிச்சந்தையில் விற்பனை செய்யும். அந்த வகையில் மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவுக் கழகம் அந்த கோதுமையை மாவு மில்கள், தனியார் வர்த்தகர்கள் போன்றோருக்கு வெளிச்சந்தையில் விற்பனை செய்கிறது. வெளிச்சந்தையில் கோதுமை வரத்தை அதிகரித்து அதன் விலை விரைவில் குறைப்பது தான் இதன் நோக்கம் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.