இந்திய அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழா டெல்லியில் உள்ள ராஜ்பாதையில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் நாட்டின் 74-ஆவது அரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையில் இந்த குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றுகிறார். அதன் பின் அணிவகுப்பு கடமையின் பாதையில் ஜனாதிபதி மாளிகை அருகே தொடங்கி விஜய் சவுக்கு இந்தியா கேட் வழியாக செங்கோட்டை வரை செல்கிறது.

ஒவ்வொரு வருடமும் இந்த குடியரசு தினத்தையொட்டி வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது வழக்கமாகும். அந்த வகையில் இந்த வருடத்திற்கான விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி என்பவர் கலந்து கொள்கிறார். இந்நிலையில் கூகுள் நிறுவனம் தனது டூடுல் அமைப்பை  குடியரசு தின விழாவினை பிரதிபலிக்கும் விதமாக  மாற்றியுள்ளது. அதில் குடியரசு தின அணிவகுப்பின் பல்வேறு கூறுகள் இடம் பெற்றுள்ளது. அதாவது மோட்டார் சைக்கிள் சாகசம், ஜனாதிபதி மாளிகை, இந்தியா கேட் போன்றவை சிக்கலான கையால் வெட்டப்பட்ட காகிதத்தில் வடிவமைக்கப்பட்டது போல் இடம்பெற்றுள்ளது.