டெல்லி அருகே வாலிபரை 15 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லியைச் சேர்ந்த அப்தாப் என்ற இளைஞர் தனது காதலி ஸ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி உடலை நகரின் பல்வேறு இடங்களிலும் வீசி எறிந்த சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. இந்நிலையில் தற்போது அதேபோல் டெல்லி அருகே உள்ள காசியாபாத் நகரில் மீண்டும் ஒரு கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. காசியாபாத் நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மிலால் பிரஜாதிபதி. அதே பகுதியில் சேர்ந்த அக்ஷய் குமார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் அக்ஷய் குமார் மீலால் பிரஜாதிபதியின் மனைவியுடனபேசி பழகி வந்துள்ளார்.

இதனை பிரஜாதிபதி கண்டித்த போதும் அக்ஷய் குமார் அடிக்கடி அவரது மனைவியிடம் பழகியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே பிரஜாதிபதியின் மகளுக்கு தீக்காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு பிரஜாதிபதியின் மனைவி உடன் இருந்து குழந்தையை கவனித்து வந்துள்ளார். மனைவி மருத்துவமனையில் இருப்பதினால் வீட்டு வேலைக்கு உதவி செய்ய வருமாறு பிரஜாதிபதி அக்ஷய்குமாரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து குளிர்பானங்களை குடிக்க வைத்துள்ளார். அதை குடித்ததும் மயங்கி விழுந்த அக்ஷய் குமாரை பிரஜாதிபதி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளார்.

அதன் பின் நள்ளிரவு நேரத்தில் உடல் துண்டுகளை மூன்று பைகளில் எடுத்து சென்று கோடபுஸ்டா பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் குப்பைகளில் வீசியுள்ளார். அந்த குப்பைகளை நாய் கிளறிய போது அதில் உடல் துண்டுகள் கிடைப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து  விசாரணை நடத்திய போலீசார் பிரஜாதிபதியை கைது செய்துள்ளனர்.