நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவான பதான் திரைப்படம் வரும் 25-ஆம் தேதி திரையரங்கிற்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதனையொட்டி கடந்த டிசம்பர் மாதம் படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியிடப்பட்டது. அதில் பேஷாராம் யங் பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பாடலுக்கு தடை கோரி வழக்கும் தொடுக்கப்பட்டது. இதற்கிடையே மத்திய பிரதேசத்தில் ஐநாக்ஸ் தியேட்டரில் இந்து ஜாக்ரன் மஞ்ச் அமைப்பின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு பதான் திரைப்படம் திரையிடப்படக்கூடாது என திரையரங்கு நிர்வாகத்தினரிடம் கூறிவிட்டு சென்றுள்ளனர்.

இது குறித்து அசாம் முதல் மந்திரி இமாம் தா விஷ்வா சர்மாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஷாருக்கான் யார்? அவர் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவரது படம் பற்றியும் எனக்கு தெரியாது என பதில் அளித்து பேசி உள்ளார். மாநில மக்கள் அசாமை பற்றி கவலைப்பட வேண்டும். இந்தி திரைப்படங்களை பற்றி அல்ல ஷாருக்கான் என்னை தொடர்பு கொண்டு பேசவில்லை. அப்படி அவர் என்னை தொடர்பு கொண்டால் அது குறித்து விசாரிப்பேன் சட்டம் மற்றும் ஒழுங்கு மீறப்பட்டிருந்தால் வழக்கு பதிவு செய்யப்படும் எனக் கூறியுள்ளார். இந்நிலையில் அசாம் முதல் மந்திரிக்கு நேற்று அதிகாலை தொலைபேசி அழைப்பு மணி வந்துள்ளது.

அதில் மறுமுனையில் நடிகர் ஷாருக்கான் அவரிடம் பேசி உள்ளார். இது தொடர்பாக முதல் மந்திரி விஸ்வா வெளியிலுள்ள டிவிட்டர் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, “பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இன்று என்னை தொடர்பு கொண்டு பேசினார். அவரது படம் திரையிடப்பட்ட போது கௌகாத்தி நகரில் நடைபெற்ற சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பது அரசின் கடமை என அவருக்கு உறுதி கூறினேன். இது குறித்து நாங்கள் விசாரணை செய்து அது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என பதிவிட்டுள்ளார்.