கோவை – டெல்லி- ஹசரத் நிஜாமுதீன் கொங்கு வருடாந்திர விரைவு ரயில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி முதல் தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் தெலுங்கானா செகந்திராபாத் இடையே இயக்கப்படும் சபரி விரைவு ரயில் ஜனவரி 1 முதல் ஷோரனூர் சந்திப்புக்கு பதில் சோரானூர் பி கே பின் வழியாக இயக்கப்படும்.
பயணிகளின் வசதிக்காக இந்த ரயில் இரு மார்க்கத்திலும் வடகச்சேரியில் ஒரு நிமிடம் நின்று செல்லும். கோவையிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஹசரத் நிஜாமுதீன் செல்லும் கொங்கு வருடாந்திர விரைவு ரயில் மாலை 4.15 மணிக்கு பதில் 4.25 மணிக்கு புறப்படும். ஜனவரி 1ஆம் தேதி முதல் பாலக்காட்டில் இருந்து ஈரோடு செல்லும் விரைவு ரயில் பிற்பகல் 2.40 மணிக்கு பதில் 3 மணிக்கு புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
