மகாராஷ்டிரா மாநிலத்தில் முகிமந்திரி மகிலா சக்திகரன் அபியான் திட்டம் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி வரை செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக மாநிலம் மற்றும் மத்திய அரசுகளின் அரசு திட்டங்கள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த தளமாக இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த திட்டத்தை பெண் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் கண்காணிக்க வேண்டும் என்றும் இந்த திட்டத்தில் துறைச் செயலாளர் அதிகாரியாக இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் வெளியிடப்பட்டு 24 மணி நேரத்தில் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. எனவே இன்னும் ஓரிரு நாட்களில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.