மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று, ஆனந்த கவுல்கர் என்பவர், கடைக்கு வெளியே, தன் சலூனுக்கு வந்து, விரலில் உள்ள மை அடையாளத்தைக் காட்டுபவர்களுக்கு, இலவச ஹேர்கட் செய்து தருவதாக, கடைக்கு வெளியே பலகை வைத்துள்ளார். வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தன்னால் இயன்ற வரையில் புதுமைகளை புகுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கவுல்கரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.