மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் அழுத்தமான வேடங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இவர் விஷால் நடிப்பில் வெளியாகிய ஆக்ஷன் படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை அடுத்து தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் எனும் திரைப்படத்தில் ஈழத் தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் நடித்த பூங்குழலி கதாபாத்திரமானது நல்ல வரவேற்பை பெற்று இவருக்கான ஒரு அடையாளத்தை கொடுத்தது. அதனை தொடர்ந்து இவர் நடித்த கட்டா குஸ்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் ஐஸ்வர்யா லட்சுமி கைதி, மாஸ்டர் ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் அர்ஜுன் தாஸுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தன் சமூகவலைதளத்தில் இதய குறியீடுடன் பகிர்ந்திருந்தார்.

இதற்கு ரசிகர்கள் காதலுக்கு வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்தனர். இந்த நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி தன் இணையப்பக்கத்தில் முந்தைய பதிவிற்கு விளக்கமளித்து பதிவு ஒன்றை பகிர்ந்து உள்ளார். அவற்றில், நண்பர்களே என் கடைசி பதிவு இவ்வளவு வைரலாகும் என எதிர்பார்க்கவில்லை. நாங்கள் சந்திக்க நேர்ந்ததால் ஒரு போட்டோவை கிளிக்செய்து பதிவிட்டேன். நாங்கள் இரண்டு பேரும் நண்பர்கள் தான். அவர் உங்களுடையவர்” என்று பதிவிட்டு உள்ளார்.