மணிரத்னம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மாதவன், வித்யா பாலன் உட்பட பலரது நடிப்பில் உருவாகிய “குரு” படம் வெளியாகி 16 வருடங்கள் ஆகிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்த பிறகு அபிஷேக் பச்சன் ரயிலில் வெளியூருக்கு செல்ல புறப்படுவார். அப்போது என்னையும் கூப்பிட்டு போறீங்களா என்று ஐஸ்வர்யா ராய் கேட்க, அதற்கு உன்கிட்ட டிக்கெட் இல்லையே என அபிஷேக் சொல்வார்.

பின் உங்க மடியில் அமர்ந்து வருவதற்கு டிக்கெட் வேணுமா என ஐஸ்வர்யா கூறுவார். இந்நிலையில் இந்த காட்சியை குறிப்பிட்டு நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் டுவிட்டர் பக்கத்தில், இனிய வாழ்த்துக்கள் என முதலில் குறிப்பிட்டிருந்தது. அதன்பின் அந்த பதிவை ரீ டுவிட் செய்த நெட்ஃப்ளிக்ஸ் , குரு பட காட்சியை குறிப்பிட்டு மடியில் உட்கார்ந்து செல்ல டிக்கெட் தேவையில்லை என்பதை உறுதிப்படுத்த முடியுமா? என IRCTC -ஐ டேக் செய்திருக்கிறது.