பஹத் பாசில் இப்போது முதன் முறையாக கன்னட திரையுலகில் நுழைந்து தூமம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் நாயகியாக நடிக்கும் அபர்ணா பாலமுரளியும் முதல்முறையாக கன்னட திரையுலகில் நுழைந்துள்ளார். இப்படத்தை பிரபல டைரக்டர் பவன்குமார் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக விவியன் ராதாகிருஷ்ணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் மீது கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மாடல் ஒருவரும் மாடல் ஒருங்கிணைப்பாளரும் என 2 பெண்கள் மீ டூ புகார் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளனர்.

இது தொடர்பாக அந்த மாடல் அழகி சமூகவலைத்தளபக்கம் வாயிலாக வெளியிட்டுள்ள பதிவில், டாக்குமென்ட்ரி படப்பிடிப்பு சமயத்தில் விவியன் ராதாகிருஷ்ணன் தன் உடலில் தொடக்கூடாத பகுதிகளை தொட்டார். மேலும் அவரது உடலை தன் உடல் மேல் படச்செய்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார். அதேபோல் அந்த மாடல் ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது, விவியன் ராதாகிருஷ்ணனுடன் பணிபுரிந்த நாட்களில் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல தொல்லைகளுக்கு ஆளானதாக குறிப்பிட்டு உள்ளார்.