இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், முந்தைய அதிமுக ஆட்சியில் இந்த பணியை துவங்கி வைத்த அமித்ஷா, இபிஎஸ் உடன் கைகுலுக்கினார். கைகுலுக்கியதை தவிர வேறு எந்த நிதியும் மத்திய அரசு இதுவரை தரவில்லை. இதனால் தமிழக அரசுக்கு இந்த ஆண்டு 9000 கோடியும் அடுத்த ஆண்டு 12 ஆயிரம் கோடியும் கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.