கேரளா கொல்லம் பகுதியில் கடந்த நவம்பர் 27 அன்று 6 வயது சிறுமி சாரா கடத்தப்பட்ட வழக்கில் தென்காசியை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமி கூறிய அடையாளங்களை வைத்து குற்றவாளியின் புகைப்படத்தை வரைந்த போலீசார் தேடுதல் வேட்டியில் இறங்கினர்.

தனிப்பிரிவு அமைத்து குற்றவாளியை தேடி வந்த நிலையில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கே ஆர் பத்மகுமார் மற்றும் அவரது மனைவி மகள் என மூவர் கைது செய்யப்பட்டனர். சிறுமியின் தந்தையின் பண சிக்கலை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பத்மகுமார் முடிவு செய்து குழந்தையை கடத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்ட அந்த மூவரிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.