நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று கேரளாவில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்த நடிகை கீர்த்தி சுரேஷின் தாயும் நடிகையுமான மேனகா கேரளாவில் தாமரை மலர  வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, புதிய ஆட்சி வந்தால்தான் மாற்றங்கள் எப்படி இருக்கும் என்பது தெரியவரும். 15 வருடங்களுக்குப் பிறகு ஒரு நல்ல ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை என் மனதில் இருக்கிறது. தாமரை மலர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. இதுவரை கேரளாவில் பாஜக ஆட்சி வந்ததில்லை. இந்த முறை பாஜக ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும். கேரளாவில் 10 முறை தோல்வி அடைந்த பாஜக இந்த முறை கண்டிப்பாக ஆட்சியைப் பிடிக்கும். கண்டிப்பாக திருவனந்தபுரம் மற்றும் திருச்சூர் ஆகிய பகுதிகளில் பாஜக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. மேலும் சுரேஷ் கோபி நிச்சயமாக வெற்றி பெறுவார் என்று கூறினார்.