செல்வராகவனின் நடவடிக்கையால் புதுப்பேட்டை படத்தில் இருந்து விலகியதாக காமெடி நடிகர் பாவா லட்சுமணன் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “புதுப்பேட்டை படத்தில் 2 நாட்கள் நடித்தேன். ஆனால், எனக்கு நடிக்க தெரியவில்லை எனக்கூறி, கெட்ட வார்த்தைகளில் செல்வராகவன் என்னை திட்டியதால் படத்தில் இருந்து வெளியேறினேன்” என்றார். மூத்த நடிகர்களில் ஒருவரான அவரின் இந்த பேச்சு, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.