தன்னை செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவரின் செல்போனை நடிகை தீபிகா படுகோன் தட்டிவிட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவரை ரசிகர்கள் செல்போன்களில் போட்டி போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்தனர். அப்போது ரசிகர் ஒருவரின் அருகே சென்ற தீபிகா அவரின் செல்போனை கண நேரத்தில் தட்டி விட்டு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.