தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து இன்னும் ஒரு படத்தில் நடித்த பிறகு சினிமாவை விட்டு விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். அதாவது தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில் வருகின்ற சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிட இருப்பதால் சினிமாவை விட்டு விலக இருக்கிறார்.

இந்நிலையில் பிரபல நடிகை வரலட்சுமி தனக்கு நடிகர் விஜய் ஐபிஎல் டிக்கெட் வாங்கி கொடுத்ததாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் நான் பார்த்த முதல் இரண்டு போட்டிகளின் ஐபிஎல் டிக்கெட் நடிகர் விஜய் வாங்கி கொடுத்தது தான் என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் வரலட்சுமியின் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.