பாஜகவின் வளர்ச்சியால் கேரளத்தின் கலாசார அடையாளங்கள் அழிந்து விடும் அபாயம் இருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக எச்சரித்துள்ளார்.
அமித் ஷா சமீபத்தில் கேரளத்தில் பேசியபோது, “உள்ளாட்சித் தேர்தலில் 25 சதவீத வாக்குகள் மற்றும் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெறுவதே பாஜகவின் இலக்கு” என கூறியதைக் குறிப்பிடும் அவர், இதன் மூலம் பாஜகவின் முக்கியமான குறிக்கோள் கேரளத்தின் அரசியல், சமூகம், கலாசாரம் ஆகிய அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவது என விளக்கினார்.
எர்ணாகுளத்தில் நடைபெற்ற மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி தொடர்பான கருத்தரங்கில் பேசிய முதல்வர், “பாஜகவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும், கேரளத்தின் பாரம்பரியத்தை அழிக்கும் அபாயத்தை தந்து விடும். ஓணம் போன்ற முக்கியமான பண்டிகைகளையும் அவர்கள் மாற்ற முயற்சிக்கிறார்கள்.
மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் மட்டுமின்றி, ஒவ்வொரு குடிமகனும் பாஜகவின் செயல்கள் எதையெல்லாம் பாதிக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
