தமிழகத்தில் இன்று முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை தொடங்குகிறது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவு மற்றும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கு ஜூன் 6ஆம் தேதி வரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.