தமிழகத்தில் உள்ள முக்கியமான 90 ஏரிகளில் 54 டிஎம்சி அதாவது 24 சதவீதம் மட்டுமே நீர் இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏரிகளுக்கு வரத்து இல்லாத நிலையில் குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது கோடையில் வெப்பம் அதிகரிப்பால் நீர் ஆவியாவதை தடுக்க முடியவில்லை. இதனால் கோடை காலத்தை குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் நிலைமையை சமாளிப்பது கேள்விக்குறியாகி உள்ளது.