நாம் பொதுவாக ரயில்களில் பயணம் செய்யும்போது நல்ல உணவு எங்கே கிடைக்கும் என தேடியிருப்போம். மேலும் ரயிலை விட்டு இறங்கி உணவு வாங்க சென்றால் ரயில் கிளம்பிவிடுமோ என்ற பயம் இருக்கும். இந்நிலையில் ரயில்களில் பொதுப்பெட்டிகளில் பயணிப்போரின் வசதிக்காக சூப்பர் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது 34 ரயில் நிலையங்களில் உணவு கவுண்டர்களை, பொதுப்பெட்டிகள் அருகே அமைத்துள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. ரூ.20க்கு பூரி மசாலா, தயிர், எலுமிச்சை சாதம் மற்றும் ரூ.3க்கு தண்ணீர் என குறைந்த விலையில் உணவுகள் விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.