தமிழகத்தில் அரசு பள்ளிகளில் வழங்கப்படுவது போல தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 175 சிறப்பு பள்ளிகளிலும் பயிலும் 5,725 மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அந்த பள்ளிகளுக்கு அரசு பள்ளி சத்துணவு மையத்தில் இருந்து ஜூன் மாதம் முதல் உணவு விநியோகிக்கவும்  பயனாளிகளுக்கு உணவு வழங்கிட பொறுப்பாளர்களை நியமிக்கவும் தட்டு மற்றும் டம்ளர் உள்ளிட்ட உபகரணங்களை ஏற்பாடு செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.