பெங்களூரு HSR லே அவுட் இல் கடந்த 21ஆம் தேதி ஒரு குடும்பம் திருமணத்திற்கு காரில் சென்று விட்டு இரவு 11.30 மணி அளவில் வீடு திரும்பியுள்ளனர். வீட்டிற்கு உள்ளே இறக்கி விடப்பட்ட சாயிஷா ஜன்னத் என்ற ஒன்றரை வயது சிறுமி தன்னுடைய தந்தையின் பின்னால் ஓடி வந்து கார் கதவுக்கு அருகில் நின்று கொண்டிருந்தாள்.

ஆனால் குழந்தையை கவனிக்காமல் தந்தை காரை இயக்கியதில் குழந்தை மீது கார் ஏறியது. இதனால் பலத்த காயம் அடைந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.