குழந்தை பெற்றுக் கொள்ளும் ஊழியர்களுக்கு 62 லட்சம் ரூபாய் போனஸ் வழங்கப்படும் என்று தென் கொரியாவை சேர்ந்த Booyoung Group என்ற நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தங்களுடைய நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் குழந்தை பெற்றுக் கொண்டால் 75 ஆயிரம் (62 லட்சம்) போனசாக வழங்கி வருகின்றது. இதனால் 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்த 70 குழந்தைகளுக்கு சுமார் 55.2 லட்சம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 43 கோடி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.