குழந்தை பெற்றுக்கொள்ளும் ஊழியர்களுக்கு ரூ.62 லட்சம் போனஸ் வழங்குவதாக தென் கொரியா நிறுவனம் ஒன்று வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ‘Booyoung Group’ என்ற நிறுவனம், தங்களுடைய நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் குழந்தை பெற்றுக்கொண்டால் $75,000 (அதாவது இந்திய மதிப்பில் ரூ.62 லட்சம்) போனஸாக வழங்கி வருகிறது.

இதனால் 2021ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்த 70 குழந்தைகளுக்கு சுமார் $55.2 லட்சம் டாலர்கள் (₹43 கோடி) வழங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.