இந்தோனேஷியாவில் உள்ள மேற்கு பப்புவா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு 11:53 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.1 ரிக்ட்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நிலநடுக்கத்தில் வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் அச்சமடைந்து சாலையில் தஞ்சம் புகுந்தனர். இதுவரை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.