கலைத்துறையில் பணியாற்றும் குழந்தை நட்சத்திரங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் NCPCR புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான குழந்தைகள் கலைத்துறையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இந்த விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி கலைத்துறை தொடர்பான பணிகளில் ஈடுபடும் ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுடன் பெற்றோரோ அல்லது அதிகாரப்பூர்வ காப்பாளர்களோ உடன் இருக்க வேண்டும். தொடர்ந்து 27 நாட்கள் வேலைகளில் ஈடுபடுத்தக் கூடாது. குழந்தைகள் கல்வி கற்பதை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.