இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி (LIC) பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குழந்தைகளுக்காக மற்றொரு புதிய காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எல்ஐசி அமிர்தபால் திட்டமானது தனிப்பட்ட, சேமிப்பு, ஆயுள் காப்பீட்டுத் திட்டம்.

இந்த திட்டமானது குழந்தையின் உயர் கல்வி மற்றும் பிற ஏராளமான நன்மைகளை கொண்டது. எதிர்காலத்தில் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும்  வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பிப்ரவரி 17, 2024 முதல் அமலாகிறது. இது இணைக்கப்படாத, பங்கேற்காத, தனிநபர், சேமிப்பு, ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும்.