மத்திய பிரதேசம் மாநிலம் மோரெனா மாவட்டத்தில் 34 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் வசித்து வரும் நிலையில் அவரது கணவர் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக சிறைச்சென்றுள்ளார். தற்போது அவர் ஜாமினீர் வந்துள்ள நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணின் வீட்டில் சமாதானம் பேச கர்ப்பிணி பெண் சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த மூன்று ஆண்கள் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பிறகு மற்றொரு பெண்ணின் உதவியுடன் கர்ப்பிணி என்றும் பாராமல் அவர் மீது எரிபொருளை ஊற்றி தீ வைத்துள்ளனர். 80 சதவீதம் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது.