உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள மதோபட்டி என்ற கிராமத்தில் 75 வீடுகள் மட்டுமே உள்ளது. இங்கு ஏராளமான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர். இந்த கிராமத்தில் இருந்து இதுவரை 51 பேர் அகில இந்திய பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த கிராமம் தலைநகர் லக்னோவில் இருந்து 300 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.

அதனால் தான் இந்த கிராமம் ஐஏஎஸ் தொழிற்சாலை என்று அழைக்கப்படுகிறதாம். அரசுப் பணிகளில் அதிக தேர்வர்கள் உள்ள கிராமம் மாதோபட்டி என்பது குறிப்பிடத்தக்கது. திருவிழாக் காலங்களில் கிராமம் முழுவதும் அரசு வாகனங்கள் நிரம்பி வழிவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.