தமிழகத்தில் குரூப் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும். தேர்வு முடிவுகளுக்கான காலதாமதம் குறித்த விளக்கத்தை டிஎன்பிஎஸ்சி தெரிவிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு துறையில் காலியாக உள்ள குரூப் 2 பணியிடங்கள் 121, குரூப் 2ஏ பணியிடங்கள் 5097 ஆகியவற்றை நிரப்புவதற்கான முதன்மை தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட நிலையில் 9 மாதங்கள் ஆகியும் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இந்த நிலையில் விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.