குமரி கடல் பகுதிகளில் மார்ச் 4 மற்றும் 5-ம் தேதிகளில் 55 கிலோமீட்டர் வேகத்தில் சுரைக்காற்று வீச கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மார்ச் 4, 5 ஆகிய தேதிகளில் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சுரைக்காற்று வீச வாய்ப்புள்ளது.

அதனால் மீனவர்கள் அந்த தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம். அதேபோல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 2, 3 ஆகிய நாட்களில் வட வானிலை காணப்படும். மேலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் சனிக்கிழமை ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அதில் கூறப்பட்டுள்ளது.