I.N.D.I.A கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், மத்திய அரசு கேஸ் விலையை 10 ஆண்டுகளில் ₹800 உயர்த்திவிட்டு, ₹100 குறைத்துள்ளதாக சாடினார். I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் சமையல் எரிவாயு ₹500-க்கு வழங்கப்படும் என்றும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.