இயற்கை எழில் கொஞ்சும் சிக்கிம் மாநிலத்தின் பசுமையான மலைப் பகுதிகளுக்கு இடையே, குட்டிச் சிறுமி ஒருவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்துப் பேசிய நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. காடுகளையும், இயற்கையையும் நாம் ஏன் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து, அந்தச் சிறுமி மிகவும் மழலை மாறாத மொழியில், அதே நேரத்தில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் பேசியுள்ளார். பார்ப்பவர்களின் நெஞ்சைத் தொடும் வகையில் அமைந்த அந்தச் சிறுமியின் மாசற்ற பேச்சும், அவரது அசாத்திய தைரியமும் சமூக வலைதளவாசிகளின் இதயங்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
The future has a message for us this #WorldEnvironmentDay
Young Grace Wangchuk Bhutia from Sikkim reminds us that every action counts when it comes to protecting nature.
In a few simple words, her heartfelt appeal is a powerful call to build a cleaner, greener and more… pic.twitter.com/nIKNMWnbwr
— Jyotiraditya M. Scindia (@JM_Scindia) June 5, 2026
இந்த வைரல் வீடியோவை தற்செயலாகப் பார்த்த மத்திய அமைச்சர் ஜோதிடராதித்ய சிந்தியா, அந்தச் சிறுமியின் விழிப்புணர்வுப் பேச்சைக் கண்டு மெய்சிலிர்த்துப் போயுள்ளார். சிறுமியின் அசாத்திய திறமையைப் பாராட்டித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அவர், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை பெரியவர்களுக்கு மிக எளிமையாகக் கற்றுக்கொடுத்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
