தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டார். பெண்கள் தங்களுடைய குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைக்கும் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாகவும், அவர்களுடைய முன்னேற்றத்திற்காகவும் இந்த தொகை வழங்கப்படுவதாக கூறினார்.

அதன்படி செப்டம்பர்  பதினைந்தாம் தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 65 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தற்போது இதற்கான இறுதி  பணிகள் அனைத்து  முடிவடைந்து தற்போது பட்டியல்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து பயனாளிகளின் வங்கி கணக்கு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.