கேரளா திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது.

ராஜீவ் காந்தி ஏவியேஷன் அகாடமியின் பயிற்சி விமானம் இன்று (புதன்கிழமை) கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது விபத்துக்குள்ளானது. விமானம் (TYPE CESNA 172R) ரன்வே 32 இலிருந்து புறப்படும்போது, ​​காலை 11.36 மணிக்கு B மற்றும் C டாக்ஸிவேகளுக்கு இடையே மேற்கு நோக்கிச் சென்று கீழே விழுந்தது. புறப்படும் போது விமானம் கட்டுப்பாட்டை இழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயிற்சி விமானி உயிர் தப்பினார். அதாவது சம்பவம் நடந்த சில நிமிடங்களில் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலைய ARFF குழுவினர் விமானியை உடனடியாக மீட்டனர். உயிர்ச்சேதம் இல்லை..