சிவகங்கை மாவட்டம் கீழடியில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள அகழ் வைப்பகத்தை சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.பழங்கால பொருட்களை மக்களுக்கு காட்சி படுத்தும் விதமாக இந்த அருங்காட்சியகமானது 2 ஏக்கர் நிலத்தில் ரூ.18.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில்  தற்போது ஏப்ரல் 1 முதல் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டைச் சேர்ந்த பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10, மாணவர்களுக்கு ரூ.5 என்றும், வெளிநாட்டைச் சேர்ந்த பெரியவர்களுக்கு ரூ. 50, சிறியவர்களுக்கு ரூ.25 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.