44 மத்திய பல்கலைக்கழகங்கள், 31 மாநில பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 168 பல்கலைக்கழகங்கள் க்யூட் நுழைவுத்தேர்வை பின்பற்றி இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த உள்ளன. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு மார்ச் 12 கடைசி தேதிதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மார்ச் 30ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.