காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சத்யபால் மாலிக் வீடு உட்பட அவருக்கு தொடர்புடைய 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் சத்யபால் மாலிக். மத்திய அரசை சத்திய பால் மாலிக் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.