தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சென்னை மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. குறிப்பாக அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும் பழங்கள் சாப்பிடவும், காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை தேவை இன்றி வெளியே நடமாட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இரண்டு டிகிரி வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.