டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக பொதுமக்கள் மூச்சு விட கூட முடியாமல் தவித்து வருகின்றனர். அதனை தடுக்கும் விதமாக அரசும் பல வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் காற்று மாசு குறையாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகள் அடுத்த இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.