கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதன் குப்பம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரிஹரன்(14) அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஹரிஹரன் 40 அடி உயரமுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மீது ஏறி நின்று காற்றாடி பறக்க விட்டுள்ளார். அப்போது நூல் அறுந்து காற்றாடி தனியாக பறந்து சென்றது.

அதனை பிடிக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக ஹரிஹரன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ஹரிஹரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.