அதிர்ஷ்டம் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்ற அளவுக்கு இங்கு ஒருவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. அதாவது ஆம்பூரை சேர்ந்த 49 வயதான நடராஜன் என்பவர் ஐக்கிய அமீரகத்தில் உள்ள எமிரேட்ஸ் ட்ராவின் ஃபாஸ்ட் 5 பம்பர் பரிசை வென்றுள்ளார். அதில் அவருக்கு 25 ஆயிரம் திர்ஹாம் ( ரூ.5.6 லட்சம்) தொகை விழுந்துள்ளது. அதுவும் அந்த தொகை அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.