பிலிப்பைன்ஸ் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்புகள் செயல்பட்டு வருகின்றது. இந்த அமைப்புகள் அங்கு அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்று வருகின்றது. இந்த நிலையில் அந்நாட்டில் லனோ டி சுர் மாகாணத்தின் கவர்னரான அலண்டோ அடியாங் இன்று காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களுடன் பாதுகாவலர்களும் உடன் சென்றனர்.

இந்த கார் புகிங்கான் மாகாண எல்லைப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பயங்கரவாதிகளால் குறி வைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் கவர்னர் படுகாயம் அடைந்தார். மேலும் அவருடைய பாதுகாவலர்கள் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து கவர்னர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.