மேற்கத்திய நாடுகளில் துப்பாக்கி சூடு கலாச்சாரம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க நாட்டில் மிசிசிப்பி மாகாணம் அர்க்கப்பட்லா நகரில் இன்று ஒருவர் திடீரென துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய நபரை உடனடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் துப்பாக்கி சூட்டிற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.