உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலன் மஸ்க் twitter நிறுவனத்தை சமீபத்தில் வாங்கிய நிலையில் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களில் சிலரை பணி நீக்கம் செய்தார்.  எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றிய பின் தொடர்ந்து பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில்  அதிகாரப்பூர்வ அக்கவுண்ட்டுகளுக்கு சந்தா செலுத்த வேண்டும் என முதலில் அறிவித்தார். தற்போது, ‘Two Factor Authentication’ எனப்படும் அக்கவுண்ட் பாதுகாப்பு முறை இனி சந்தா செலுத்தும் பயனர்களுக்கு மட்டும் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ‘Tweetdeck’ வசதியும் சந்தாதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது