அமெரிக்க நாட்டின் ஜியார்ஜியா மாகாணத்தின் தலைநகரான அட்லாண்டாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று கொலம்பியாவிற்கு புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 184 பயணிகளும் ஆறு ஊழியர்களும் இருந்துள்ளனர்.

விமானிகள் கட்டுப்பாட்டு அறையின் சிக்னலுக்கு காத்திருந்த நிலையில் திடீரென விமானத்தின் முன் பக்க டயர்களில் ஒன்று கழன்று விழுந்து உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானிகள் கட்டுப்பாட்டு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து விமான ஊழியர்கள் பயணிகளை பத்திரமாக மீட்டனர்.