சீன நாட்டின் ஜியான்சி மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று பிற்பகல் அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வளாகத்தின் அடித்தளத்தில் ஏற்பட்ட தீயானது மற்ற தளங்களுக்கும் வேகமாக பரவியுள்ளது. இதனால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேறினர்.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் 25 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது இநிலையில் தற்போது பலி எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.