இலங்கையில் உள்ள காட்டுநாயகாவில் இருந்து கொழும்பு நோக்கி அந்நாட்டு மந்திரி சனத் நிஷாந்த காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரின் மீது எதிரே வந்த கன்டெய்னர் லாரி மோதியுள்ளது. இந்த விபத்தில் சனத் நிஷாந்த, ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர் என மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மந்திரி சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாவலர் என இருவரும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர். இந்த விபத்து குறித்து இலங்கை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.