கடலூர் மாவட்டம் கோண்டூர் ஊராட்சி துணை தலைவர் சாந்தி என்பவர் இன்று மக்களவை தேர்தலில் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்தார். அவரின் வாக்கை ஏற்கனவே யாரோ பதிவு செய்துவிட்டதாக பணியாளர்கள் சொல்ல அதிர்ச்சியடைந்தார். அவர் கூறும் போது, நான் துணை தலைவராக உள்ளேன், என்னை கள்ள ஓட்டு போடு என பணியாளர்கள் கூறுகின்றனர். போடுவதென்றால் போடுங்கள் இல்லையேல் கிளம்புங்கள் என என்னிடம் சொல்கிறார்கள். இது தான் ஜனநாயகமா என கோபமாக கேள்வியெழுப்பினார்.